February 22, 2025
தேசியம்
செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலை தணிக்க இஸ்ரேலை வலியுறுத்தும் கனடா

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களை தணிக்க இஸ்ரேலை வலியுறுத்துவதாக வெளியுறவு அமைச்சர் Mélanie Joly தெரிவித்தார்.

கடந்த வார இறுதியில் நிகழ்ந்த வான்வழித் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலை ஈரான் மீது  மேற்கொள்ள வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்

ஈரான் மீது நேரடித் தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சரிடன் கூறியதாக Mélanie Joly தெரிவித்தார்.

ஈரான் மீதான மேலதிக தடைகள் குறித்து இந்த வாரம் G7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள  வெளியுறவு அமைச்சர்களுடன் விவாதிக்கவுள்ளதாக Mélanie Joly கூறினார்

சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது April 1ம் திகதி நிகழ்ந்த வான்வழித் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.

இந்த தாக்குதலில் மூத்த இராணுவ அதிகாரிகள் பலியாகினர்.

Related posts

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறுமா Edmonton Oilers?

Lankathas Pathmanathan

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சட்டசபை அமர்வுகளில் கலந்து கொள்ளாத Ontario முதல்வர்

Gaya Raja

Maritimes மாகாணங்களில் 100,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லை

Lankathas Pathmanathan

Leave a Comment