February 21, 2025
தேசியம்
செய்திகள்

Nagorno-Karabakhக்கு கனடா $2.5 மில்லியன் மனிதாபிமான உதவி

Nagorno-Karabakh மனிதாபிமான நெருக்கடிக்கு 2.5 மில்லியன் டொலர் உதவியை கனடா அறிவித்துள்ளது

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு கனடா 2.5 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை வழங்கியுள்ளது,

வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த நிதியுதவியை அறிவித்தது.

சுகாதார சேவைகள், உணவு போன்ற அவசர உதவிகளை வழங்க சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு இந்த நிதி வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Azerbaijanனின் இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து 120,000 மக்கள் தொகை கொண்ட Nagorno-Karabakh மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை அண்டை நாடான  Armeniaவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

Nagorno-Karabakh பிராந்தியத்தில் மனித உரிமைகளை மதிக்கப்படுவதை கனடா தொடர்ந்து வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly  கூறினார்.

இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கனடா இயங்கும் என அவர் தெரிவித்தார்.

Related posts

Toronto துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் அடையாளம் வெளியானது!

Lankathas Pathmanathan

Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதை எதிர்க்க CTC பயன்படுத்தப்படுகிறது?

Lankathas Pathmanathan

ஐயப்பன் இந்து ஆலயம் முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment