தேசியம்
செய்திகள்

சூடானில் இருந்து 100 கனடியர்கள் வெளியேற்றம்!

சூடானில் இருந்து இதுவரை வெளியேறியுள்ள கனடியர்களின் எண்ணிக்கை 100 என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

கனேடியர்களை வெளியேற்ற உதவிய ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியாவிற்கு ஆகிய நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சூடானில் தங்கியிருப்பதாக பதிவு செய்யப்பட்ட 1,700 கனேடியர்களில் செவ்வாய்க்கிழமை (25) வரை வெளியேறியதாக அறிவிக்கப்படும் 100 பேரும் அடங்குவதாகவும் அமைச்சர் கூறினார்.

இவர்களில் 550 பேர் நாட்டை விட்டு வெளியேற உதவி கோரியுள்ளதாக அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

சொந்தமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் கனடியர்களுக்கு கனடிய அரசாங்கம் தகவல் வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

Related posts

Conservative கட்சியின் அடுத்த தலைமை விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை: Leslyn Lewis

முன்கூட்டிய வாக்கு எண்ணிக்கை திட்டமிடப்பட்டதை விட முன்னர் ஆரம்பிக்கும்!

Lankathas Pathmanathan

பிரதமரால் கனடியர்கள் விரக்தி: NDP தலைவர்

Lankathas Pathmanathan

Leave a Comment