தேசியம்
செய்திகள்

சூடானில் இருந்து 100 கனடியர்கள் வெளியேற்றம்!

சூடானில் இருந்து இதுவரை வெளியேறியுள்ள கனடியர்களின் எண்ணிக்கை 100 என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

கனேடியர்களை வெளியேற்ற உதவிய ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியாவிற்கு ஆகிய நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சூடானில் தங்கியிருப்பதாக பதிவு செய்யப்பட்ட 1,700 கனேடியர்களில் செவ்வாய்க்கிழமை (25) வரை வெளியேறியதாக அறிவிக்கப்படும் 100 பேரும் அடங்குவதாகவும் அமைச்சர் கூறினார்.

இவர்களில் 550 பேர் நாட்டை விட்டு வெளியேற உதவி கோரியுள்ளதாக அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

சொந்தமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் கனடியர்களுக்கு கனடிய அரசாங்கம் தகவல் வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

Related posts

April 28 அல்லது May 5 பொதுத் தேர்தல்? – ஞாயிறு அறிவித்தல்!

Lankathas Pathmanathan

கனடா – அமெரிக்கா எல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்!

Gaya Raja

காலாவதியாக உள்ள தடுப்பூசியை வீணாக்க வேண்டாம்: மத்திய அரசு மாகாணங்களிடம் கோரிக்கை

Gaya Raja

Leave a Comment