February 22, 2025
தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் Ontario உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Ontario தமிழ் இனப்படுகொலையை அது தொடர்பான கல்வி முயற்சிகள் தொடர்பான சட்டம் இயற்றும் நோக்கங்களுக்காக அல்லது அதை நினைவுகூருவதற்காக அங்கீகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என செவ்வாய்க்கிழமை (28) நீதிபதி Jasmine Akbarali தனது முடிவில் தெரிவித்தார்.

Ontario மாகாணத்தின் பிரகடனத்தின் மீது சிங்கள கனேடிய குழுக்களின் அரசியலமைப்பு சவாலை நீதிமன்றம் நிராகரித்தது.

இது உலகப் போர்கள் அல்லது வேறு ஏதேனும் சர்வதேச மோதலின் சர்வதேச அம்சங்களை மையமாகக் கொண்ட மாகாணக் கல்வி கொள்கையிலிருந்து வேறுபட்டதல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் May 11 முதல் 18 வரை தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் கடைப்பிடிக்கப்படுவதை அறிவிக்கும் 104 சட்டமூலத்தை PC கட்சியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் கடந்த ஆண்டு சமர்ப்பித்தார்.

Ontario சட்டமன்றத்தின் அனைத்து கட்சிகளும் இந்த தனியார் மசோதா ஏகமனதாக ஆதரித்த நிலையில் நிறைவேற்றப்பட்டது.

Related posts

Ontarioவில் 700ஐ அண்மிக்கும் ஏழு நாட்களுக்கான தொற்றுக்களின் சராசரி!

Gaya Raja

Greenbelt திட்டம் குறித்த RCMP விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

ஒரே நாளில் மீண்டும் 3,500க்கும் அதிகமான தொற்றுகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment