February 21, 2025
தேசியம்
செய்திகள்

வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு தேசிய நினைவுச் சின்னம்

வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு தேசிய நினைவுச் சின்னத்தை உருவாக்க கனேடிய மத்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
கனேடிய பாரம்பரிய அமைச்சர் Pablo Rodriguez இந்த திட்டத்தை ஒரு அறிக்கை மூலம் வெள்ளிக்கிழமை (29) அறிவித்தார்.
இந்த தேசிய நினைவுச் சின்னம் Ottawaவில் பிரதானமான இடத்தில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நினைவுச் சின்னத்தின் வடிவமைப்பு, “உயிர் பிழைத்தவர்கள் தலைமையிலான வழிநடத்தல் குழு” என்ற அழைப்பின் மூலம் தீர்மானிக்கப்படும்.
2015ஆம் ஆண்டு வெளியான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்  அறிக்கையில் இது போன்ற தேசிய நினைவுச் சின்னத்திற்கான தேவை வலியுறுத்தப்பட்டது.

Related posts

அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் கனடிய வீட்டு விலைகள் 25 சதவீதம் வரை வீழ்ச்சியடையும்: TD வங்கி

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

B.C. பேரூந்து விபத்தில் நால்வர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment