February 23, 2025
தேசியம்
செய்திகள்

COVID போராட்டங்களின் முக்கிய அமைப்பாளர்கள் மூவர் மீது புதிய குற்றச்சாட்டுகள்

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய அமைப்பாளர்கள் மூவர் புதிய குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

போராட்டங்களின் முக்கிய அமைப்பாளர்களான Tamara Lich, Chris Barber, Pat King ஆகியோர் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இவர்கள் இருவரும் கடந்த மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் Barber, February 18ஆம் திகதியும், Lich, March 7ஆம் திகதியும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்

வியாழக்கிழமை (24) நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட King புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
Ottawa-Carleton தடுப்பு மையத்தில் காவலில் இருக்கும் King, இப்போது இணை குற்றவாளியான  Tyson George Billings உடன் சேர்ந்து 10 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

Related posts

Manitoba விபத்தில் நான்கு இளைஞர்கள் பலி!

Lankathas Pathmanathan

$33.2 மில்லியன் வாகனத் திருட்டு விசாரணையில் இரண்டு தமிழர்களும் தேடப்படுகின்றனர்

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தை உயர்த்திய கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment