தேசியம்
செய்திகள்

தடுப்பூசி கடவுச்சீட்டை Quebec நடைமுறைபடுத்துகிறது !

Quebec மாகாணம் COVID  தடுப்பூசி கடவுச்சீட்டை நடைமுறைபடுத்தவுள்ளது.

மாகாண முதல்வர் François Legault வியாழக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். Quebecகில் அண்மைய காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக தடுப்பூசி கடவுச்சீட்டை ஏற்க திட்டமிட்டுள்ளதாக  முதல்வர்  அறிவித்தார்.

மாகாணம்  நான்காவது அலையின் உச்சத்தில் இருப்பதாக கூறிய முதல்வர், தடுப்பூசி கடவுச்சீட்டு அதற்கு ஒரு பதிலாக செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.

வியாழக்கிழமை Quebecகில்  305 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இது May மாதம் 30ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களின் எண்ணிக்கையாகும்.

Related posts

காசாவில் உள்ள கனேடியர்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவ கனடா புதிய நடவடிக்கை

Lankathas Pathmanathan

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

Gaya Raja

Quebecகில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம்!

Gaya Raja

Leave a Comment