தேசியம்
செய்திகள்

Ontario மீண்டும் முழுமையாக திறக்கப்படும்போது ; பொது சுகாதார நடவடிக்கைகள் பலவும் நீக்கப்படும்!

மீளத் திறக்கும் திட்டத்தில் கட்டுப்பாடுகளை நீக்குவது பற்றிய விவரங்களை Ontario அரசாங்கம் வெளியிடுகின்றது.

மீளத் திறக்கும் திட்டத்தில் தற்போது மூன்றாவது நிலையில் இருக்கும் Ontario, மீண்டும் முழுமையாக திறக்கப்படும்போது, முக கவசங்களை உட்புறத்தில் கட்டாயமாக அணியும் நடைமுறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

மாகாணம் மீண்டும் முழுமையாக திறக்கப்படும்போது, பெரும்பாலான பொது சுகாதார நடவடிக்கைகள் நீக்கப்படும் என மாகாண சுகாதார அமைச்சரின் பேச்சாளர் கூறினார்.

Ontario மாகாணம் மீண்டும் திறக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான முதல் அளவுகோலை வியாழக்கிழமை தாண்டியமை குறிப்பிடத்தக்கது

மாகாணம் மீண்டும் திறக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திலிருந்து வெளியேறக்கூடிய ஆரம்ப திகதி August மாதம் 6ஆம் திகதியாகும் என்பது நினைவு கூறத்தக்கது.

Ontarioவில் வெள்ளிக்கிழமை மதியம் வரை சுமார் 69 சதவீதமான தகுதியுள்ள கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

Related posts

COVID மாறுபாடுகளினால் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயார்: தலைமை மருத்துவர்

Lankathas Pathmanathan

CRA குறித்த புகார்கள் 70 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியது நியாயமற்றது: மேன்முறையீட்டு நீதிமன்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment