தேசியம்
செய்திகள்

கனேடியர்களுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டு எளிய முறையில் அமையும்: பிரதமர் Trudeau

கனேடியர்களுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டு எளிய முறையில் அமையும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.

ஆனாலும் கனேடியர்கள் எப்போது வெளிநாட்டு பயணங்களுக்கான COVID தடுப்பூசி நிலையின் முறையான ஆதாரமான கடவுச்சீட்டுகளை எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கு பதிலளிப்பதை பிரதமர் தவிர்த்தார். சர்வதேச பயணத்திற்கான ஆவண கட்டமைப்பிற்கு Ottawa பொறுப்பேற்கும் என கூறிய Trudeau, உள்நாட்டில் ஒரு திட்டத்தை கொண்டு வருவது மாகாணங்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.

ஏனைய நாடுகள் தடுப்பூசி கடவுச்சீட்டுகளை விரைவாக உருவாக்கிவரும் நிலையில் கனடாவுக்கான முறையான ஆவணமொன்றை உருவாக்க அரசாங்கம் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இது போன்ற ஒரு ஆவணம் உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு பதலளிப்பதற்கு பிரதமர் Trudeau மறுத்து விட்டார்.

Related posts

பிணை சீர்திருத்தம் குறித்து கவனம் செலுத்துகிறோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Bloc Quebecois மூன்றாவது நிலையை தக்க வைக்கும்!

Lankathas Pathmanathan

Albertaவில் காணாமல் போன சிறுமி மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment