February 22, 2025
தேசியம்
செய்திகள்

இந்த வாரம் கனடாவிற்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்தது!

பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இந்த முதல் வார இறுதியில் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை கனேடிய எல்லை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் கனடாவிற்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அன்று முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், ஏற்கனவே எல்லை கடக்க அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலை இந்த வார இறுதியில் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு தொடர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ரஷ்யாவிற்கு எதிராக கனடா பொருளாதார தடை

Lankathas Pathmanathan

கனடா எல்லையில் அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிக்கிறது

Gaya Raja

கனடாவில் நிகழும் குற்றங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது: Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment