தேசியம்
செய்திகள்

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Jody Wilson-Raybould முடிவு

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் Jody Wilson-Raybould அறிவித்தார்.

உள்நாட்டு நல்லிணக்கம், காலநிலை மாற்றம், சமூக மற்றும் இன நீதி போன்ற விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார். தனது பார்வையில் Ottawa நச்சு மற்றும் பயனற்றதாக மாறியிருப்பதை முன்னாள் நீதி அமைச்சரான Wilson-Raybould மேற்கோளிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பின்னடைவு மற்றும் ஓரங்கட்டப்படுதல் ஆகியவற்றிற்கு தீர்வு காண ஆழ்ந்த மாற்றம் தேவை எனவும் அவர் கூறினார்.

British Colombiaவின் Vancouver Granville தொகுதியை Jody Wilson-Raybould, 2015ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவ படுத்துகின்றார்.

Related posts

கனடிய தமிழர் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம்

Quebecகில் பலர் மின்சாரத்தை இழந்த நிலை தொடர்கிறது

Lankathas Pathmanathan

London வாகனத் தாக்குதல் சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரிக்கை

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!