தேசியம்
செய்திகள்

முஸ்லிம் குடும்பம் மீதானது ஒரு பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் Trudeau

London Ontarioவில் முஸ்லிம் குடும்பம் ஒன்றின்  மீது வாகன சாரதி ஒருவர் மேற்கொண்டது ஒரு பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் Justin Trudeau கூறினார்.  

ஞாயிற்றுக்கிழமை நால்வர் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் உரையாற்றினார். நான்கு பேரின் உயிர்கள் ஒரு மிருகத்தனமான, கோழைத்தனமான, வெட்கக்கேடான வன்முறை செயலில் பறிக்கப்பட்டதாக பிரதமர் Trudeau தனதுரையில் குறிப்பிட்டார்.

இந்த அமர்வின் போது இந்த தாக்குதலை Conservative தலைவர் Erin O’Toole, NDP தலைவர் Jagmeet Singh, Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet, பசுமை கட்சியின் நாடாளுமன்ற தலைவி Elizabeth May ஆகியோர் தமது உரையின் மூலம் கண்டித்தனர்.

Related posts

June மாத இறுதிக்குள் 10 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெற்றுக் கொள்ளும்

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் புதிய தலைமை குழுவை அறிமுகம்

Lankathas Pathmanathan

கனடா – அமெரிக்கா போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment