தேசியம்
செய்திகள்

மனைவியை கொலை செய்ததற்காக தமிழருக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

மனைவியை கொலை செய்ததற்காக தமிழர் ஒருவருக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை Ontario உயர் நீதிமன்ற நீதிபதியால் விதிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு December மாதம், தனது 46 வயதான மனைவியான ஜெயந்தி சீவரத்தினத்தை படுகொலை செய்ததாக 45 வயதான கதிர்காமநாதன் சுப்பையா மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜெயந்தி சீவரத்தினம், Scarborough வில் தனது இல்லத்தில் அவரது கணவனால் பாதிக்கப்பட்ட பல காயங்களுடன் இறந்தார்.

ஜெயந்தி சீவரத்தினத்தின் கொலையை ஒரு கோழைத்தனமான தாக்குதல் என நீதிபதி Ian MacDonnell தனது தீர்ப்பில் தெரிவித்தார். தற்போது 49 வயதான கதிர்காமநாதன் சுப்பையா, ஏற்கனவே தடுப்பு காவலில் வைக்கப்பட்ட நிலையில் மேலதிகமாக ஐந்து வருடங்களுக்கு குறைவான காலம் சிறை தண்டனையை எதிர்கொள்கிறார்.

Related posts

கனேடிய விண்வெளி துறையின் முன்னாள் பொறியாளர் சீன நிறுவனத்தின் சார்பாக செயல்பட்டார்: RCMP குற்றம்

Lankathas Pathmanathan

கனடாவின் முதலாவது சுதேச ஆளுநர் நாயகம் பதவியேற்றார்!

Gaya Raja

Ontarioவில் COVID ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment

error: Alert: Content is protected !!