தேசியம்
செய்திகள்

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கான நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரம்!

நீண்டகாலமாக சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கான  நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்தது.

828 நாட்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களுக்கான Michael Spavor, Michael Kovrig ஆகியோரின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளன. இவர்களின் முன்னாள் தொழிலதிபர் Michael Spavor எதிர்வரும் 19ஆம் திகதியும், முன்னாள் தூதர் Michael Kovrig எதிர்வரும் 22ஆம் திகதியும் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். இந்தத் தகவலை கனேடிய வெளிவிவகார அமைச்சர் Marc Garneau ஒரு அறிக்கையில் இன்று உறுதிப்படுத்தினார்

இவர்கள் இருவருக்குமான தூதரக அணுகலை கனடா தொடர்ந்தும் நாடுவதாகவும் அமைச்சர் Garneau  தனது அறிக்கையில் குறிப்பிட்டார். அதேவேளை அடுத்த வாரம் நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொள்ளுமாறு கனடா கோரியுள்ளதாகவும் கனேடிய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. 

Related posts

சீனாவின் COVID நிலை குறித்து அவதானித்து வரும் கனடிய பொது சுகாதார நிறுவனம்

Lankathas Pathmanathan

RCMP அதிகாரி மீது வாகனத்தால் மோதிய நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

Lankathas Pathmanathan

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த விசாரணை?

Lankathas Pathmanathan

Leave a Comment