தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

இலங்கையில் மனித உரிமை நிலை சீர்குலைந்து செல்வது கவலையளிக்கின்றது: கனடா

இலங்கையில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்த கனடா தனது கவலையை வெளியிட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய கனடிய வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் Rob Oliphant இன்று  இந்தக் கவலையை வெளியிட்டார்.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையை வரவேற்பதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 30/1 தீர்மானத்திற்கான ஆதரவை மீளப் பெறும் இலங்கை அரசின் முடிவு வருத்தமளிக்கின்றது எனவும் Oliphant இன்று கூறினார்.

 

Related posts

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி COVID தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan

கனடாவின் பொருளாதாரம் ஒரு கொந்தளிப்பான ஆண்டை எதிர்கொள்கிறது: இணை நிதியமைச்சர்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 24ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment