தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

இலங்கையில் மனித உரிமை நிலை சீர்குலைந்து செல்வது கவலையளிக்கின்றது: கனடா

இலங்கையில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்த கனடா தனது கவலையை வெளியிட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய கனடிய வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் Rob Oliphant இன்று  இந்தக் கவலையை வெளியிட்டார்.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையை வரவேற்பதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 30/1 தீர்மானத்திற்கான ஆதரவை மீளப் பெறும் இலங்கை அரசின் முடிவு வருத்தமளிக்கின்றது எனவும் Oliphant இன்று கூறினார்.

 

Related posts

ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

ரஷ்ய, பெலாரஷ் அரசாங்க ஆதரவாளர்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள்

Lankathas Pathmanathan

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர் இலங்கை குறித்து வெளியிட்ட அறிக்கை – Statement on Sri Lanka by Canadian Foreign Minister at UNHRC

Lankathas Pathmanathan

Leave a Comment