தேசியம்
செய்திகள்

Ontarioவில் அமுலில் வந்த அவசரகால நிலை!

Ontarioவில் அவசரகால நிலை அமுலில் வந்துள்ளது.

இன்று (செவ்வாய்) நள்ளிரவு 12:01 முதல் இந்த அவசரகால நிலை அமுலில் வந்துள்ளது. குறைந்தது 28 நாட்களுக்கு இந்த அவசரகால நிலை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ontarioவில் முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார். Ontarioவின் இரண்டாவது அவசர நிலையாக இது அமைந்துள்ளது. இந்த அறிவித்தலின் ஒரு பகுதியாக வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவும் அமைந்துள்ளது. இந்த அவசரகால பிரகடனத்தின் கீழ், வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

COVID பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அவசரகால நிலை அறிவித்தல் வெளியானது.

Related posts

மூன்றாவது தவணையாக Toronto நகர முதல்வராகும் Tory

Lankathas Pathmanathan

Bramptonனில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி!

Lankathas Pathmanathan

வளரும் நாடுகளுக்கு 830 மில்லியன் டொலர் நிதியுதவி: கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment