தேசியம்
செய்திகள்

213,000 பேர் CERB உதவித் தொகையை மீண்டும் செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது: CRA

கனடாவின் அவசரகால பதிலீட்டு நலத் திட்டத்தில் (Canada Emergency Response Benefit – CERB) உதவி பெற்றவர்கள் 213,000 பேர் மீண்டும் பணத்தை செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

கனடா வருவாய் திணைக்களம் (Canada Revenue Agency – CRA) இது குறித்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து 213,000 பேருக்கு CRA அறிவுறுத்தல் கடிதங்களை அனுப்பியுள்ளது. இவர்கள் இரண்டு தனி அரசு நிறுவனங்களில் CERB உதவித் திட்டத்தில் தவறாக கொடுப்பனவுக்கு விண்ணப்பித்திருக்கலாம் CRA கூறுகின்றது. தொற்றுக் காலத்தில் கடன்களை வசூலிப்பதை இடைநிறுத்தியுள்ள நிலையில் பணத்தை உடனடியாக மீண்டும் செலுத்த வேண்டிய தேவை இப்போது இல்லை என CRA கூறுகின்றது.

அதேவேளை பெருமளவில் வருமானம் பெறும் 100,000க்கும் அதிகமானவர்கள் CERB
உதவியை பெற்றுக் கொண்டதாக CRA கூறியுள்ளது.

 

 

Related posts

வங்கி கொள்ளையை தடுக்க முயன்ற Toronto காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்!

Gaya Raja

எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்த புதிய விபரங்கள் விரைவில் வெளியாகும்: அமைச்சர் LeBlanc

Gaya Raja

கனடாவில் 30 சதவீதமானவர்கள் தடுப்பூசியை பெற்றனர்

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!