தேசியம்
செய்திகள்

ஸ்ரீலங்கா புதிய ஜனாதிபதி – இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்தித்தார்.

புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh புதன்கிழமை (02) சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு  கனடிய அரசாங்கத்தினதும் மக்களினதும் வாழ்த்துகளை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் செயல்முறைக்கும், கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கும் கனடிய அரசாங்கத்தின் முழு ஆதரவையும் இந்த சந்திப்பில் Eric Walsh வெளிப்படுத்தினார்.

ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும், நாட்டில் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கும் புதிய ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு இந்த சந்திப்பில்  Eric Walsh பாராட்டு தெரிவித்தார்.

Related posts

Ontario Placeக்கு மாற்றப்படும் Science Centre?

Lankathas Pathmanathan

கனடாவிற்கு புலம் பெயரும் பல புதிய குடியேற்றவாசிகள் சில வருடங்களில் மீண்டும் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர்: கனடிய புள்ளி விவர திணைக்களம்

Lankathas Pathmanathan

மேகப் புண் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment