September 13, 2026
தேசியம்
செய்திகள்

தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி உக்ரைனில் மரணம்

உக்ரைனில் உள்ள தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி மரணமடைந்தார்.

மரணமடைந்தவர் 36 வயதான Jean-Francois Ratelle என தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனில் கனடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதை கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் அவரது பெயரையோ, மரணத்திற்கான காரணத்தையோ அவர்கள் வெளியிடவில்லை.

மேலும் தகவல்களை பெறுவதற்கு உள்ளூர் அதிகாரிகளுடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாகவும்,  குடும்பத்திற்கு தூதரக உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

Related posts

Conservatives கட்சியின் இடைக்கால தலைவரானார் Bergen

Lankathas Pathmanathan

வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து கனடிய – அமெரிக்க தலைவர்கள் உரையாடல்?

Lankathas Pathmanathan

நான்கு மாகாணங்களில் உள்ள மாணவர்கள் திங்கட்கிழமை வகுப்பறைக்குத் திரும்புகின்றனர்

Lankathas Pathmanathan

Leave a Comment