தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற வளாக வாசல் கதவை வாகனத்தால் மோதிய நபர் கைது

கனடிய நாடாளுமன்ற வளாக வாசல் கதவை வாகனத்தால் மோதிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை (03) அதிகாலை 3:30 மணியளவில் நாடாளுமன்ற முன் வாசல் மீது வாகனத்தால் மோதிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் Ottawa நகரை சேர்ந்த 29 வயதான Maxwell Pate என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மீது பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய குற்றச் சாட்டுகள் பதிவாகியுள்ளன.

மூன்று வாரங்களாக தொடர்ந்த சுதந்திர பேரணியை தொடர்ந்து கடந்த February மாதம் முதல் நாடாளுமன்றத்திற்கு முன்னால் உள்ள Wellington வீதி வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புதன்கிழமை Ottawaவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வெளியே உள்ள வாசல் கதவில் சுற்றுலாப் பேருந்து மோதியுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

தடுப்பூசி பெறாத உறுப்பினர்களை பதவி விலத்தும் கனடிய இராணுவம்

Lankathas Pathmanathan

ஏழு மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

கனடா பயணத்திற்கு மிகவும் ஆபத்தான நாடு: ரஷ்ய தூதர்

Lankathas Pathmanathan

Leave a Comment