February 22, 2025
தேசியம்
செய்திகள்

இலங்கை தூதுவருக்கு மதிப்பளித்தமைக்கு மன்னிப்பு கோரியது கனடா கந்தசாமி ஆலயம்

இலங்கை அரசாங்கத்தின் கனடிய தூதுவரை மதிப்பளித்தமைக்கு கனடா கந்தசாமி ஆலய நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (10) வெளியிட்ட அறிக்கையில் இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை அரங்கேற்றிய இலங்கை அரசின் பிரதிநிதியை மதிப்பளிக்கும் முடிவினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வலி, துன்பம் போன்றவைகளுக்கு மனம் வருத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க ஆலய நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

கனடா கந்தசாமி ஆலயத்தின் மன்னிப்பு அறிக்கை

எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த வெளிப்படையான வகையில் தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் நன்மதிப்பையும் முன்னுரிமைகளையும் வெளிப்படுத்தும் செயல்முறைகளை ஏற்படுத்துவோம் என அந்த அறிக்கை கூறுகிறது.

Related posts

மன்னரின் மூன்று நாள் கனடிய விஜயத்தின் செலவு $1.4 மில்லியன்

Lankathas Pathmanathan

வருடாந்த பணவீக்கம் May மாதத்தில் 2.9 சதவீதமாக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

March 2023க்குள் 75 சதவீத கனடியர்கள் COVID தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment