February 23, 2025
தேசியம்
செய்திகள்

இந்தியாவில் இருந்து கிடைக்கும் விசா விண்ணப்பங்கள் உன்னிப்பாக பரிசீலிக்கப்படும்?

இந்தியாவில் இருந்து வரும் மாணவர் விசா விண்ணப்பங்களை உன்னிப்பாக பரிசீலித்து வருவதாக குடிவரவு அமைச்சர் Marc Miller  தெரிவித்தார்.

கனடாவுக்கு வர விரும்புபவர்கள், மாணவர் விசா விண்ணப்பங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையை கனடா முன்னெடுக்கும் என அமைச்சர் கூறினார்.

கனடாவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை எதிர்கொள்ள கோடை முழுவதும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகள் அனுமதியில் கனடாவுக்குள் வருபவர்கள், அதன் மூலம் புகலிடம் கோருவது அல்லது அமெரிக்காவுக்குள் நுழைய முனைவது போன்ற நகர்வுகள் தடுக்கப்படும் எனவும்  அமைச்சர் கூறினார்.
இந்தியாவில் இருந்து பெறப்படும் விசா விண்ணப்பங்கள்  எதிர்காலத்தில் கூடுதல் ஆய்வுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் Marc Miller கூறினார்.
இந்தியாவில் இருந்து மாணவர் விசா விண்ணப்பங்களில் கனடாவிற்குள் வரும் பலரும் இங்கு அகதி தஞ்சம் கோரும் நிலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர்?

Lankathas Pathmanathan

புதிய தலைவருக்கு Conservative உறுப்பினர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் வாக்களித்தனர்

Lankathas Pathmanathan

Ontarioவில் June மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment