February 23, 2025
தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுக்க வேண்டும்?

கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுக்க வேண்டும் என Liberal அரசாங்கம் தெரிவிக்கிறது.

ஜனநாயக நிறுவனங்களின் அமைச்சர் Dominic LeBlanc இந்த தகவலை வெளியிட்டார்.

வெளிநாட்டு தலையீடு விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியை அரசாங்கம் ஆதரிக்கிறது என அவர் கூறினார்.

அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்

இந்த வகையில் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் Bloc Québécois பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என Dominic LeBlanc கூறினார்.

Related posts

அரசியலில் இருந்து விலக முன்னாள் Liberal அமைச்சர் முடிவு

Lankathas Pathmanathan

ஐந்து குடும்ப உறுப்பினர்களின் மரணத்தில் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு!

Lankathas Pathmanathan

2024இல் மேலும் மூன்று வட்டி விகித குறைப்பு சாத்தியம் ?

Lankathas Pathmanathan

Leave a Comment