February 23, 2025
தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் கனடிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

தமிழ் இனப்படுகொலை கனடிய நாடாளுமன்றத்தில் நினைவு கூறப்பட்டபோது  கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly கலந்து கொண்டார்.

தமிழின படுகொலையை நினைவு கூறும் “தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்” கனடிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றது.

முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சரும் Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி இந்த நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் Melanie Joly, எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள்,  தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்துகொண்டு இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறினார்கள்.

May 18, தமிழின படுகொலை தினமாக கனடிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது வருடம் இதுவாகும்.

Related posts

நாடாளுமன்றத்தின் முன்பாக கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணி

Lankathas Pathmanathan

அடுத்த வாரத்திற்குள் 198,000க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகலாம்

Lankathas Pathmanathan

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட புதிய ஜனநாயக கட்சி!

Gaya Raja

Leave a Comment