September 16, 2026
தேசியம்
செய்திகள்

தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பும் பிரதமர்

கனடாவுக்கு வரும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசாங்கம் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் Justin Trudeau இந்த கருத்தை தெரிவித்தார்.

தற்காலிக குடியேற்றவாசிகளின் நிலைமையை “கட்டுப்பாட்டுக்குள்” கொண்டு வர வேண்டும் என பிரதமர் கூறினார்.

கனடாவில் உள்வாங்க முடிந்ததை விட அதிக எண்ணிக்கையில் தற்காலிக குடியேற்றவாசிகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

2017 இல், கனடாவின் மக்கள் தொகையில் இரண்டு சதவீதமாக இருந்த தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை இப்போது 7.5 சதவீதமாக உள்ளது என Justin Trudeau சுட்டிக் காட்டினார்.

Related posts

அமெரிக்க வர்த்தக கொள்கையை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது: Mark Carney

Lankathas Pathmanathan

நாடாளாவிய ரீதியில் நடைபெற்றது முதல்குடி இராணுவத்தினர் தினம்

Lankathas Pathmanathan

Influenza காரணமாக கடந்த மாதம் British Colombiaவில் ஐந்து குழந்தைகள் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment