February 23, 2025
தேசியம்
செய்திகள்

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மத்திய அரசு $210 மில்லியன் உதவி!

Torontoவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு உதவ கனடிய மத்திய அரசாங்கம் 100 மில்லியன் டொலர்களை வழங்குகிறது.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவ மத்திய அரசாங்கம் கூடுதலாக 210 மில்லியன் டொலர்களை வழங்குகிறது.

அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகை Toronto நகருக்கு வழங்கப்படுகிறது.

குடிவரவு அமைச்சர் Sean Fraser செவ்வாய்க்கிழமை (18) காலை இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அறிவிக்கப்பட்ட உதவித் தொகையில் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் ஆதரவளிக்கப்படாத Toronto அகதிகளுக்கு உதவ 97 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஆனாலும் Ontario வரும் அகதிகளுக்கு மாகாண அரசாங்கத்தின் உதவி குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Doug Ford தவிர்த்தார்.

Related posts

RCMP அதிகாரி Quebec காவல்துறையால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

கனடாவின் மக்கள் தொகை 2068இல் 57 மில்லியனாக அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியின் தலைவி தலைமை பதவியில் இருந்து விலகல்!

Gaya Raja

Leave a Comment