September 15, 2026
தேசியம்
செய்திகள்

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மத்திய அரசு $210 மில்லியன் உதவி!

Torontoவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு உதவ கனடிய மத்திய அரசாங்கம் 100 மில்லியன் டொலர்களை வழங்குகிறது.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவ மத்திய அரசாங்கம் கூடுதலாக 210 மில்லியன் டொலர்களை வழங்குகிறது.

அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகை Toronto நகருக்கு வழங்கப்படுகிறது.

குடிவரவு அமைச்சர் Sean Fraser செவ்வாய்க்கிழமை (18) காலை இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அறிவிக்கப்பட்ட உதவித் தொகையில் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் ஆதரவளிக்கப்படாத Toronto அகதிகளுக்கு உதவ 97 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஆனாலும் Ontario வரும் அகதிகளுக்கு மாகாண அரசாங்கத்தின் உதவி குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Doug Ford தவிர்த்தார்.

Related posts

பதவி விலகும் முடிவு சரியானது: முன்னாள் Toronto நகர முதல்வர் John Tory

Lankathas Pathmanathan

காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும்?

Lankathas Pathmanathan

இரத்து செய்யப்பட்டன நாடாளுமன்ற அமர்வுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment