தேசியம்
செய்திகள்

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மத்திய அரசு $210 மில்லியன் உதவி!

Torontoவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு உதவ கனடிய மத்திய அரசாங்கம் 100 மில்லியன் டொலர்களை வழங்குகிறது.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவ மத்திய அரசாங்கம் கூடுதலாக 210 மில்லியன் டொலர்களை வழங்குகிறது.

அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகை Toronto நகருக்கு வழங்கப்படுகிறது.

குடிவரவு அமைச்சர் Sean Fraser செவ்வாய்க்கிழமை (18) காலை இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அறிவிக்கப்பட்ட உதவித் தொகையில் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் ஆதரவளிக்கப்படாத Toronto அகதிகளுக்கு உதவ 97 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஆனாலும் Ontario வரும் அகதிகளுக்கு மாகாண அரசாங்கத்தின் உதவி குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Doug Ford தவிர்த்தார்.

Related posts

இங்கிலாந்து வாகன விபத்தில் கனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்கள் மரணம்

Lankathas Pathmanathan

Ontarioவில் நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதியத் திட்டம் அறிவிப்பு!

Gaya Raja

இரண்டாவது தடுப்பூசியை விரைவில் வழங்க வேண்டும்: NACI பரிந்துரை

Gaya Raja

Leave a Comment