தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஆரம்பம்

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் வெள்ளிக்கிழமை (12) Ontario மாகாணத்தில் ஆரம்பமாகின்றது.

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை சட்ட மூலமாக்கும் சட்டம்  2021ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

இந்த சட்டமூலம் ஒவ்வொரு ஆண்டும் May 18ஆம் திகதி முடிவடையும் ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரமாக அறிவிக்கிறது.

Scarborough-Rouge Park தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் இந்த தனிநபர் சட்டமூலத்தை முன்வைத்திருந்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரித்த உலகின் முதலாவது  சட்டமூலமாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் 27 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Gaya Raja

Ontarioவில் 11 ஆயிரம் பேர் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலையில்

Lankathas Pathmanathan

Montreal நகரில் தாய், மகள் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment