தேசியம்
செய்திகள்

பொதுச் சேவை கூட்டணி மத்திய அரசாங்கத்துடன் தற்காலிக உடன்பாடு

கனடாவின் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தினர் மத்திய அரசாங்கத்துடன் தற்காலிக உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளனர்.

120,000 தொழிலாளர்களுக்கு கருவூல வாரியத்துடன் தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக பொதுச் சேவை கூட்டணி கூறுகிறது.

இதன் மூலம் கருவூல வாரிய ஊழியர்களுக்கான வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

திங்கட்கிழமை (01) காலை 9 மணிமுதல் அவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும் என கூறப்படுகிறது.

ஆனாலும் நாடளாவிய ரீதியில் 35,000 கனடா வருமானதுறை ஊழியர்களுக்கான வேலைநிறுத்த தொடர்வதாக பொதுச் சேவை கூட்டணி தெரிவித்துள்ளது.

Related posts

கனடாவில் 300 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள்

Lankathas Pathmanathan

புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவித்தல் இன்று வெளியிடப்படும்: Ontario அரசாங்கம்

Gaya Raja

Carbon வரி உயர்வு குறித்து அவசர நாடாளுமன்ற விவாதம் இல்லை!

Lankathas Pathmanathan

Leave a Comment