September 9, 2026
தேசியம்
செய்திகள்

பொதுச் சேவை கூட்டணி மத்திய அரசாங்கத்துடன் தற்காலிக உடன்பாடு

கனடாவின் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தினர் மத்திய அரசாங்கத்துடன் தற்காலிக உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளனர்.

120,000 தொழிலாளர்களுக்கு கருவூல வாரியத்துடன் தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக பொதுச் சேவை கூட்டணி கூறுகிறது.

இதன் மூலம் கருவூல வாரிய ஊழியர்களுக்கான வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

திங்கட்கிழமை (01) காலை 9 மணிமுதல் அவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும் என கூறப்படுகிறது.

ஆனாலும் நாடளாவிய ரீதியில் 35,000 கனடா வருமானதுறை ஊழியர்களுக்கான வேலைநிறுத்த தொடர்வதாக பொதுச் சேவை கூட்டணி தெரிவித்துள்ளது.

Related posts

Ontario மாகாண NDP தலைவராக பதவியேற்கும் Marit Stiles

Lankathas Pathmanathan

பாதுகாப்பான சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கான வழிமுறை பாதுகாக்கப்படும்: பிரதமர்

Lankathas Pathmanathan

டிமென்ஷியாவுடன் வாழும் கனடியர்கள் 2050க்குள் மூன்று மடங்காக உயரும்

Lankathas Pathmanathan

Leave a Comment