February 22, 2025
தேசியம்
செய்திகள்

சூடான் தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த கனடா முடிவு

சூடானில் உள்ள தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கனடா முடிவு செய்துள்ளது.

சூடானில் உள்ள தனது தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ஞாயிற்றுக்கிழமை (23) கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.

சூடானின் தலைநகரில் உள்ள தனது தூதரகத்தை கடந்த திங்கட்கிழமை (17) கனடா மூடியுள்ளது.

தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில் இந்த முடிவை கனடிய அரசாங்கம் எடுத்துள்ளது.

சூடானுக்கு பயண ஆலோசனையும் கடந்த வாரம் கனேடிய அரசாங்கத்தினால் புதுப்பிக்கப்பட்டது.

சூடானுக்கு அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடியர்களுக்கு அந்த பயண ஆலோசனை அறிவுறுத்துகிறது.

சூடானில் ஏற்கனவே உள்ள கனடியர்கள் பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்கியிருக்குமாறும் கனடிய அரசாங்கம் கோரியுள்ளது.

Related posts

Manitobaவின் அடுத்த முதல்வராக Kelvin Goertzen பதவியேற்கிறார் !

Gaya Raja

கடவுச் சீட்டுக்காக எதிர்கொள்ளப்படும் காத்திருப்பு நேரம் ஏற்றுக்கொள்ள முடியாதது: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் இறுதி வடிவமைப்பு திறந்து வைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment