தேசியம்
செய்திகள்

துருக்கியில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து கனடிய பெண்ணின் உடல் கண்டெடுப்பு

துருக்கியில் நிலநடுக்கத்தின் போது இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து கனடிய பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கனடாவில் இருந்து துருக்கி சென்றிருந்த கனேடியப் பெண்ணொருவரின் சடலம் கட்டிட இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் 33 வயதான Samar Zora என அவரது சகோதரியினால் அடையாளம் காணப்பட்டார்.

இவர் தனது சமானுடவியலில் முனைவர் பட்ட ஆய்வுக்காக துருக்கியின் Antakya நகரத்திற்குச் சென்றிருந்தார் எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கனடியர் ஒருவர் நிலநடுக்கத்தில் பலியானதை கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

February மாதம் 6ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகினர்.

Related posts

திருத்தந்தையின் வருகை நல்லிணக்கத்திற்கும் மாற்றத்திற்கும் இடமளிக்கிறது: முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதி – கனடிய பிரதமர் சந்திப்பு

Lankathas Pathmanathan

எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னதாக மீண்டும் திறக்கும் Ontario!

Gaya Raja

Leave a Comment