February 22, 2025
தேசியம்
செய்திகள்

Alaskaவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத பொருள் கனேடிய வான்வெளியை நோக்கி பயணித்தது?

அமெரிக்காவினால் Alaskaவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத உயரமான பொருள் கனேடிய வான்வெளியை நோக்கி வந்து கொண்டிருந்ததாக தெரிய வருகிறது.

வெள்ளிக்கிழமை (10) பிற்பகல், Alaska கரையோரத்தில் பறந்து கொண்டிருந்த அடையாளம் காணப்படாத உயரமான பொருளை F-22 போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி Joe Biden இதற்கு நேரடி உத்தரவை வழங்கியுள்ளார்

இந்த சம்பவம் கனேடிய எல்லைக்கு அருகில் நிகழ்ந்ததாக தெரியவருகிறது.

இந்த விவகாரம் குறித்து தன்னிடம் விளக்கமளிக்கப்பட்டதாக கனேடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

குறிப்பிட்ட பொருளை சுட்டு வீழ்த்தியதற்கான முடிவை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்

கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சரை Pentagonனில் சந்தித்த சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Related posts

COVID கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மாகாணங்கள்

Lankathas Pathmanathan

Brown, Poilievre அணிகளுக்கு இடையில் தொடரும் மோதல்

குழந்தைகளை தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பராமரிப்பு ஊழியரான தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment