தேசியம்
செய்திகள்

British Colombia பேரூந்து விபத்தில் ஐம்பதிக்கும் அதிகமானவர்கள் காயம்

British Colombia மாகாணத்தில் நிகழ்ந்த பேரூந்து விபத்தில் ஐம்பதிக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

சனிக்கிழமைக்கு இந்த விபத்து British Colombia மாகாணத்தின் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.

இதில் மொத்தம் 53 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களின் நிலை குறித்த விபரங்கள் வைத்தியசாலையினால் வெளியிடப்படவில்லை.

விசாரணைகள் தொடரும் நிலையில் விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

ஆனாலும் பனிப்பொழிவு விபத்துக்கான காரணியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக முதல்வர் David Eby, பொது பாதுகாப்பு அமைச்சர் Mike Farnworth, சுகாதார அமைச்சர் Adrian Dix, போக்குவரத்து அமைச்சர் Rob Fleming ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

Related posts

கனடாவில் குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் சுவாச நோய்!

Lankathas Pathmanathan

B.C. காட்டுத்தீயை எதிர்த்து போரிட இதுவரை $100 மில்லியன் டொலர் செலவு

Lankathas Pathmanathan

இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பணி செய்யவும் பயணிக்கவும் புதிய திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment