February 23, 2025
தேசியம்
செய்திகள்

தடுப்பூசி போடாத கனேடிய பார ஊர்தி ஓட்டுனர்கள் புதிய நடைமுறையின் கீழ் தனிமைப்படுத்தப்பட வேண்டும்

தடுப்பூசி போடாத கனேடிய பார ஊர்தி ஓட்டுனர்கள் புதிய நடைமுறையின் கீழ் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது.

இந்த வார இறுதியில் இந்த புதிய நடைமுறை அமுலில் வருகிறது.

தடுப்பூசி போடாத கனேடிய பார ஊர்தி ஓட்டுனர்களுக்கு இந்த புதிய நடைமுறையில் விலக்கு அளிக்கப்படாது என மத்திய அரசு வியாழக்கிழமை (13) அறிவித்தது.

கனடாவின் போக்குவரத்து, சுகாதாரம், பொது பாதுகாப்பு அமைச்சர்கள் ஒரு கூட்டறிக்கையில் இதனை அறிவித்தனர்.

கனடாவிற்கு வரும் பார ஊர்தி ஓட்டுனர்கள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் அல்லது PCR சோதனை, தனிமைப்படுத்தல் தேவைகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற கனடாவின் ஆரம்பக் கொள்கை அமுலில் இருக்கும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

லெபனானில் சிக்கியுள்ள கனடியர்கள் வெளியேற உதவும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை எல்லையை திறக்கும் எண்ணம் இல்லை- கனேடிய பிரதமர்

Gaya Raja

இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் பாதுகாப்பு காவலில்!

Lankathas Pathmanathan

Leave a Comment