February 22, 2025
தேசியம்
செய்திகள்

மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளில் தாமதம்

மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளை கனடிய அரசாங்கம் தாமதப்படுத்துகிறது.

காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலையை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos ஆறு மாத இடைநிறுத்தம் அளித்துள்ளார்.

Health கனடா முதன்முதலில் 2019இல் கனடியர்களை அதிகப்படியான மருந்து விலைகளில் இருந்து பாதுகாக்க மாற்றங்களை அறிவித்தது.

ஆனால் இந்த விதிகளை அமுல்படுத்துவதில் அரசு பலமுறை காலதாமதம் செய்து வருகிறது.

எதிர்வரும் January ஆரம்பத்தில்  நடைமுறைக்கு வர வேண்டிய விதிமுறைகள் எதிர்வரும் July ஆரம்பம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய தாமதம், தொழில்துறை, அரசு, மருந்து விநியோக அமைப்பில் உள்ள பிற நிறுவனங்களை தொற்றை  எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த அனுமதிக்கும் என அமைச்சர்  Duclos ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த திருத்தங்கள் காப்புரிமை பெற்ற மருந்துகளில் கனேடியர்களுக்கு பில்லியன் கணக்கான டொலர் களை மிச்சப்படுத்தும் என Health கனடா எதிர்பார்க்கிறது.

Related posts

வெறுப்பு குற்றங்கள் குறித்து கனடாவில் உள்ள குடிமக்களுக்கு இந்தியா எச்சரிக்கை

Lankathas Pathmanathan

உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாகுமா Bloc Québécois?

Lankathas Pathmanathan

உக்ரேனியர்களை அழிக்க ரஷ்யா விரும்புகிறது: கனடிய நாடாளுமன்றத்தில் உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan

Leave a Comment