தேசியம்
செய்திகள்

முன்னாள் வதிவிட பாடசாலைகளில் கண்டுபிடிக்கப்படும் கல்லறைகள் கனடாவின் பொறுப்பு: பிரதமர் Trudeau

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகள் கனடாவின் பொறுப்பு என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதன்  விளைவாக முதற்குடியினர் அனுபவிக்கும் காயத்திற்கும் அதிர்ச்சிக்கும் கனடா பொறுப்பு என பிரதமர் கூறினார். இந்த பயங்கரமான தவறுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு தனது அரசாங்கம் நிதி மற்றும் வளங்களை தொடர்ந்து வழங்கும் எனவும் Trudeau கூறினார்.

இந்த நாட்டில் முதற்குடி மக்கள் எதிர்கொண்ட – மற்றும் தொடர்ந்து எதிர்கொள்ளும் – முறையான இனவெறி, பாகுபாடு மற்றும் அநீதியின் வெட்கக்கேடான நினைவூட்டல் இவை என அறிக்கை ஒன்றில் பிரதமர் குறிப்பிட்டார்

கண்டுபிடிக்கப்பட்ட  கல்லறைகள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole, NDP கட்சியின் தலைவர் Jagmeet Singh ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நேரத்தில் அனைத்து முதற்குடியின மக்களும் வதிவிடப் பாடசாலைகளில் தப்பிப்பிழைத்தவர்களும் எதிர்கொள்ளும் ஆழ்ந்த துக்கத்தை தனது கட்சியும் உணர்வதாக O’Toole ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த நிறுவனங்கள் முதற்குடியின மக்களைக் கொல்ல வடிவமைக்கப்பட்டுள்ளன என கூறிய Singh, இரங்கல் தெரிவிப்பதை விட மத்திய அரசு இந்த விடயத்தில் அதிகம் செய்ய வேண்டும் எனவும் கோரினார்.  

Related posts

அமெரிக்காவுடன் வர்த்தக போருக்கு தயாராகும் கனடா?

Lankathas Pathmanathan

மேலும் மூன்று பெண்களை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Winnipeg நபர்

Lankathas Pathmanathan

Mexicoவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment