தேசியம்
செய்திகள்

எதிர்வரும் புதன்கிழமை இரண்டாம் படிக்கு நகரும் Ontario!

மீண்டும் திறக்கும் திட்டத்தின் இரண்டாம் படிக்கு எதிர்வரும் புதன்கிழமை Ontario நகர்கின்றது.

வியாழக்கிழமை Doug Ford அரசாங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டது. இதன் மூலம் ஏற்கனவே திட்டமிட்டதைவிட இரண்டு நாட்களுக்கு முன்னதாக இரண்டாம் படிக்கு Ontario நகரவுள்ளது.

பொது சுகாதார நிபுணர்களின் ஆதரவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் Ford வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறினார்.

புதன்கிழமை முதல் மீண்டும் ஐந்து பேர் வரை உட்புற சந்திப்புகளை நடத்த முடியும். அதேபோல் வெளியில் 25 பேர் வரை சந்திக்கலாம். பல மாதங்கள் மூடப்பட்டிருந்த, முடி திருத்தும் நிலையங்கள் போன்ற தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள் 30ஆம் திகதி முதல் இயங்க ஆரம்பிக்கலாம்.

Related posts

தட்டம்மை நோய் பரவல் குறித்து சுகாதார அமைச்சர் கவலை

Lankathas Pathmanathan

முதற்குடியினரின் வதிவிடப் பாடசாலைகளுக்கு கத்தோலிக்க திருச்சபை பொறுப்பேற்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

Gaya Raja

காசாவில் காணாமல் போன பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடிய அரசு

Lankathas Pathmanathan

Leave a Comment