தேசியம்
செய்திகள்

வெறுப்புணர்வைத் தூண்டும் சம்பவம் – ஹிஜாப் அணிந்த 2 சகோதரிகள் மீது தாக்குதல்

Edmonton நகருக்கு அருகே ஹிஜாப் அணிந்த இரண்டு சகோதரிகள் புதன்கிழமை மதியம் கத்தியால் தாக்கப்பட்டதாக RCMP தெரிவிக்கின்றது.

முகமூடி அணிந்த ஒருவர் ஹிஜாப் அணிந்திருந்த இரண்டு இளம் பெண்களை பயமுறுத்தியதாக RCMP தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறையினர் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

இந்தத் தாக்குதலில் ஒரு பெண் மயக்கமடைந்துள்ளதுடன் மற்றொரு பெண் கத்திமுனையில் பயமுறுத்தப்பட்டுள்ளார்.

Albertaவின் St. Albert என்ற நகரில் Alderwood பூங்காவில் பகல் நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

சகோதரிகள் மீதான இந்த தாக்குதல் வெறுப்புணர்வைத் தூண்டும் சம்பவம் என்ற வகையில் RCMP விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

Related posts

Durham இடைத் தேர்தலில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan

கனடா சிவில் உரிமை மீறல்களின் சின்னமாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு

Alberta அடுத்த வாரம் COVID கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment