தேசியம்
செய்திகள்

வெறுப்புணர்வைத் தூண்டும் சம்பவம் – ஹிஜாப் அணிந்த 2 சகோதரிகள் மீது தாக்குதல்

Edmonton நகருக்கு அருகே ஹிஜாப் அணிந்த இரண்டு சகோதரிகள் புதன்கிழமை மதியம் கத்தியால் தாக்கப்பட்டதாக RCMP தெரிவிக்கின்றது.

முகமூடி அணிந்த ஒருவர் ஹிஜாப் அணிந்திருந்த இரண்டு இளம் பெண்களை பயமுறுத்தியதாக RCMP தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறையினர் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

இந்தத் தாக்குதலில் ஒரு பெண் மயக்கமடைந்துள்ளதுடன் மற்றொரு பெண் கத்திமுனையில் பயமுறுத்தப்பட்டுள்ளார்.

Albertaவின் St. Albert என்ற நகரில் Alderwood பூங்காவில் பகல் நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

சகோதரிகள் மீதான இந்த தாக்குதல் வெறுப்புணர்வைத் தூண்டும் சம்பவம் என்ற வகையில் RCMP விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

Related posts

பசுமை கட்சியின் சார்பில் பெண் தமிழ் வேட்பாளர்

தொற்றின் பரவல் காரணமாக  மீண்டும்  மூட ஆரம்பிக்கும் பாடசாலைகள்!

Gaya Raja

தமிழர் சமூகத்தின் பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவிக்கும் நாள் இது – சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தி கனடிய பிரதமர்

Gaya Raja

Leave a Comment