தேசியம்
செய்திகள்

இந்தியாவுக்கு கனடா 10 மில்லியன் டொலர் நிதியுதவி: பிரதமர்

COVID தொற்றுக்கு எதிரான நகர்வுகளுக்கு இந்தியாவுக்கு உதவும் முகமாக கனடா 10 மில்லியன் டொலர் நிதி உதவியை அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பிரதமர் Justin Trudeau இந்த உதவித்  திட்டத்தை அறிவித்தார். கனடிய செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு இந்த உதவி அனுப்பப்படவுள்ளது. இந்த பணம் மருத்துவ அவசர ஊர்தி கொள்வனவுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் உபயோகிக்கப்படும் என   Trudeau கூறினார்.

கனடா மேலும் என்ன உதவிகளை செய்ய முடியும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் ஆலோசித்து வருவதாக பிரதமர் Trudeau தெரிவித்தார். 

Related posts

ஆறு இலங்கையர்களின் இறுதி சடங்கு ஞாயிறு மாலை ஆரம்பம்

Lankathas Pathmanathan

Quebecகிலும் ஆரம்பமானது தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம்!

Gaya Raja

காணாமல் போனதாக தேடப்பட்ட தமிழர் வீடு திரும்பினார்!

Lankathas Pathmanathan

Leave a Comment