தேசியம்
செய்திகள்

சுகாதார நடவடிக்கைகளை தளர்த்த நேரம் இதுவல்ல: Torontoவின் தலைமை சுகாதார அதிகாரி

Torontoவில் சுகாதார நடவடிக்கைகளை தளர்த்த நேரம் இதுவல்ல என Torontoவின் தலைமை சுகாதார அதிகாரி கூறினார்.

COVID தொற்றின் மூன்று திரிபுகள் Torontoவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் கருத்தை தலைமை சுகாதார அதிகாரி Eileen de Villa தெரிவித்தார். முதலாவது தொற்றைவிட புதிய திரிபுகள் வேகமாக பரவுவதற்கான திறனுடயவை எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் Toronto ஒரு புதிய தொற்று நோய்க்கு மாற்றம் காண்பதாக சுகாதார அதிகாரி தெரிவித்தார். இன்றுடன் (திங்கள்) Ontarioவில் COVID தொற்றின் இங்கிலாந்து திரிபால் பாதிக்கப்பட்ட 219 பேர் அடையாளம் காணப்பட்டனர். அதேவேளை Torontoவில் தொற்றின் புதிய திரிபுகளால் பதிக்கப்பட்ட 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

Omicron அலையின் போது 3 மில்லியன் பேர் Quebecகில் தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan

குலுக்கல் முறையில் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான புதிய திட்டம்

Lankathas Pathmanathan

பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரவுள்ள கனேடிய அரசும் இராணுவமும்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!