தேசியம்
செய்திகள்

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 13 பேர் கைது

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் 13 பேரை Akwesasne காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் 13 பேரை அண்மையில் கைது செய்ததாக Akwesasne Mohawk காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (05) இந்த சந்தேக நபர்கள் குறித்து தக்கல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்

நான்கு பேர் கொண்ட குடும்பம் சாலையில் நடந்து செல்வதையும், ஒன்பது பேர் கொண்ட மற்றொரு குடும்பம் ஒரு தனியார் வீட்டில் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அமெரிக்கப் பகுதியில் காணப்பட்ட இவர்கள் அமெரிக்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு கனடிய காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர்

Akwesasne கடற்பரப்பில் கடந்த March மாதம் கவிழ்ந்த படகுக்கு அருகில் எட்டு இந்திய, ருமேனிய குடியேறியவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

Related posts

தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடத்தின் பரிந்துரையை ஏற்றுள்ள Toronto நகரசபையின் உபகுழு

Lankathas Pathmanathan

அடுத்த பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் தலைவராக Justin Trudeau இருப்பார்: முன்னாள் கனடிய மத்திய வங்கி ஆளுநர்

Lankathas Pathmanathan

Nova Scotia அனைத்து கட்டுப்பாடுகளையும் March 21 நீக்குகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment