தேசியம்
செய்திகள்

பிரதமரின் கருத்தை மறுக்கும் சுகாதார அமைச்சரின் கருத்து

மத்திய அரசின் சுகாதார நிதி ஒப்பந்தத்தை முதல்வர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என பிரதமர் Justin Trudeau நம்பிக்கை தெரிவித்தார்

ஆனாலும் மாகாணங்களுடன் ஒரு சுகாதார நிதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னர் பல படிகளை தாண்ட வேண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார்.

சுகாதார அமைச்சரின் கருத்தை ஏற்றுக் கொண்ட பிரதமர், இந்த ஒப்பந்தத்தை முதல்வர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பிக்கை” தெரிவித்தார்.

மாகாணங்களுடன் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த உரையாடல்களின் சாதகமான பெறுபேறுகள் விரைவில் வெளியாகக்கூடும் என திங்கட்கிழமை (16) பிரதமர் அறிவித்திருந்தார்.

ஆனாலும் அதனை மறுக்கும் விதமாக சுகாதார அமைச்சரின் கருத்து அமைந்திருந்தது.

இரு தரப்பினரும் வரவிருக்கும் வாரங்களில் தொடர்ந்து செயல்பட்டு இணக்கம் காணப்பட வேண்டிய ஒரு விடயம் இதுவென அமைச்சர் Duclos செவ்வாய்க்கிழமை (17) கூறினார்.

Related posts

விமானங்களிலும் புகையிரதங்களிலும் முகமூடி கட்டுப்பாடுகளை மாற்றும் திட்டம் இல்லை: போக்குவரத்து அமைச்சர்

கனடாவில் COVID முடிவடையவில்லை: சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos

கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கிச் சட்டம் திங்கட்கிழமை அறிமுகமாகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment