தேசியம்
செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மூடப்பட்ட Waterloo விமான நிலையம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Waterloo விமான நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது.

Waterloo பிராந்திய காவல்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை (13) பிற்பகல் Waterloo சர்வதேச விமான நிலையத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Waterloo சர்வதேச விமான நிலையத்தில் மதியம் 2:10 மணியளவில் ஒரு விமானத்தில் வெடிகுண்டு இருந்ததான புகார் காவல்துறையினருக்கு விடுக்கப்பட்டது.

விமானத்தில் வெடிகுண்டுகள் ஏதேனும் உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய வெடிபொருட்களை அகற்றும் பிரிவைச் சேர்ந்தவர்கள் சோதனைகளை முன்னெடுகின்றனர்.

காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதால் விமான நிலையம் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.

Related posts

Ontarioவில் அதிக இடங்களை Conservative கட்சி வெற்றி பெறும்: O’Toole நம்பிக்கை !

Gaya Raja

பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்தின் திட்டம்: நிதி அமைச்சர் Chrystia Freeland

COVID மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment