தேசியம்
செய்திகள்

போராட்டம் நடத்தும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு 12 ஆயிரம் டொலர் அபராதம்!

Quebecகில் பாடசாலைகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் அருகில் போராட்டம் நடத்தும் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் 12 ஆயிரம் டொலர்கள் வரை அபராதத்தை எதிர்கொள்கின்றனர்.

வியாழக்கிழமை Quebec அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் விதிமுறைகளின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படலாம்.

மருத்துவமனைகள், பாடசாலைகள் தவிர குழந்தை பராமரிப்பு நிலையங்கள் அல்லது COVID பரிசோதனை மற்றும் தடுப்பூசி தளங்களுக்கு அருகில் போராட்டம் நடத்தும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களும் இந்த அபராதத்தை எதிர்கொள்ளலாம். .

இந்த நடவடிக்கை தற்காலிகமானது என கூறிய Quebec அரசாங்கம் இதன் இறுதித் திகதியை அறிவிக்கவில்லை.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், March 2020இல் அறிவிக்கப்பட்ட சுகாதார அவசர நிலையை அரசு அதிகாரப்பூர்வமாக முடிக்கும் வரை இந்தச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரியவருகிறது .

Related posts

கனடிய Olympic வீரரின் பயிற்சியாளரின் அங்கீகாரம் இரத்து!

Lankathas Pathmanathan

உள்நாட்டு வர்த்தக தடைகளை விலக்க பிரதமரும் முதல்வர்களும் இணக்கம்

Lankathas Pathmanathan

கனடியர்கள் இருவருக்கு Hong Kong காவல்துறை பிடியாணை

Lankathas Pathmanathan

Leave a Comment