தேசியம்
செய்திகள்

விமான விபத்தில் 5 கனடியர்கள் பலி

Nashville அருகே நிகழ்ந்த விமான விபத்தில் 5 கனடியர்கள் பலியாகினர்.

Nashville நகரின் அருகே ஒற்றை இயந்திர விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் திங்கட்கிழமை (04) நிகழ்ந்தது.

இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவசர தரையிறக்கத்தின் போது இந்த விமானம் விபத்துக்கு உள்ளானது.

இந்த விமானத்தில் மூன்று சிறுவர்களும் பயணித்தனர்.

இவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த கனடிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் அறிவித்தது.

விபத்து குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

கனடிய எல்லையில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தவர்களை எதிர்கொள்ளும் அமெரிக்க எல்லை காவல்துறை

Lankathas Pathmanathan

இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

Loblaw நிறுவனத்திற்கு அடுத்த ஆண்டு முதல் புதிய தலைவர் நியமனம்

Leave a Comment