தேசியம்
செய்திகள்

கனடாவில் வெளிநாட்டு தலையீட்டில் இந்தியா முன்னணியில்?

கனடாவில் வெளிநாட்டு தலையீட்டில் இந்தியா முன்னணியில் உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.

கனடாவில் வெளிநாடுகளின் தலையீட்டின் முக்கிய ஆதாரங்களில் இந்தியாவும் இருப்பதாக பிரதமர் Justin Trudeauவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jody Thomas கூறினார்.

கனடிய அரசியலில் ரஷ்யா, ஈரான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தலையிடுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் Ottawaவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கருத்து தெரிவிக்கவில்லை.

கனடாவில் உள்ள சமூகங்கள் மீது இந்தியா செல்வாக்கு செலுத்த முயற்சி செய்யலாம் என மத்திய அரசு நிறுவனங்கள் அண்மைய ஆண்டுகளில் எச்சரித்திருந்தன.

Related posts

மேம்படுத்தப்பட்ட சலுகையுடன் தொழிற்சங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

கனடாவில் Delta மாறுபாட்டின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Gaya Raja

இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்ட தமிழர்!

Lankathas Pathmanathan

Leave a Comment