தேசியம்
செய்திகள்

David Johnston பதவி விலகவேண்டும் என நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேறியது

கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் பதவியில் இருந்து David Johnston விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

David Johnston பதவி விலக வேண்டும் என கோரும் பிரேரணையை NDP நாடாளுமன்றத்தில் முன்வைத்தது.

இந்த பிரேரணை மீதான வாக்களிப்பு புதன்கிழமை (31) நடைபெற்றது.

இந்த பிரேரணை 174க்கு 150 என்ற வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணையில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த ஒரு பொது விசாரணை அவசரமாக முன்னெடுக்க அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனாலும் பதவியில் இருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கையை David Johnston நிராகரித்தார்.

Related posts

61 கனடியர்கள் மீது ரஷ்யா புதிதாக தடை உத்தரவு

Lankathas Pathmanathan

Roxham வீதி எல்லையை மூடவேண்டும்: Quebec அரசாங்கம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

நீண்ட வார இறுதிக்கு முன்னர் எரிபொருளின் விலை குறைகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment