தேசியம்
செய்திகள்

பொதுச் சேவைக் கூட்டணியின் வேலை நிறுத்தம்

கனடாவின் பொதுச் சேவைக் கூட்டணி வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்கிறது என கனடாவின் மிகப்பெரிய மத்திய பொது சேவை சங்கம் கூறுகிறது.

அரசாங்கத்திற்கும் கனடாவின் பொதுச் சேவைக் கூட்டணிக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (18) இரவு 9 மணிக்கு உடன்பாடு எட்டப்படாத நிலையில் மத்திய பொது ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.

செவ்வாய் இரவு 9 மணிக்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், புதன்கிழமை (19) நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தம் ஆரம்பமாகும் என மத்திய அரசின் பொது சேவைகள் சங்கம் ஏற்கனவே கூறியிருந்தது

இதன் மூலம் சுமார் 155 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கின்றனர்.

இதில் கனடா வருவாய் முகமை துறையை சேர்ந்த 35 ஆயிரம் தொழிலாளர்களும் அடங்குகின்றனர்

கடந்த வெள்ளிக்கிழமை முதல் 155 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத்திய பொது ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடிய சட்டப்பூர்வ நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வேலை நிறுத்தம், வரிச் செயலாக்கம், கடவுச்சீட்டு புதுப்பித்தல், வேலை வாய்ப்பு காப்பீடு, சமூகக் காப்பீடு விண்ணப்பங்கள், கனடா ஓய்வூதியத் திட்ட விண்ணப்பங்கள், சுதேச சேவைகள், படைவீரர் விவகாரங்கள் சேவைகள் உட்பட பல மத்திய அரசின் சேவைகளை பாதிக்கும் நிலை தோன்றியுள்ளது.

Related posts

தடுப்பூசி சான்று தேவைப்படும் இரண்டாவது மாகாணமாகும் British Colombia

Gaya Raja

வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தீங்குகளை போப் ஆண்டவர் ஏற்றுக்கொண்டார்

Lankathas Pathmanathan

Mark Carney தேர்தல் பிரச்சார குழு $1.9 மில்லியன் டாலர் நிதி இதுவரை திரட்டியது!

Lankathas Pathmanathan

Leave a Comment