September 26, 2023
தேசியம்
செய்திகள்

புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு வர வேண்டாம் என ஊக்கப்படுத்துங்கள்: பிரதமரிடம் Quebec முதல்வர் கோரிக்கை

புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு வர வேண்டாம் என ஊக்கப்படுத்துமாறு கனடிய பிரதமரிடம் Quebec முதல்வர் கோரியுள்ளார்.

துன்புறுத்தலில் இருந்து தப்பியோடி வரும் மக்களை கனடா வரவேற்கும் என Justin Trudeau தெரிவித்த கருத்து  கனடாவில் பலர் தஞ்சம் கோருவதான காரணமாக தான் கருதுவதாக Francois Legault கூறினார்.

அமெரிக்காவில் இருந்து Quebec மாகாணத்திற்குள் நுழையும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் என Quebec குடிவரவு அமைச்சர் Christine Fréchette செவ்வாய்கிழமை (14) தெரிவித்திருந்தார்.

வார இறுதியில் Quebec ஊடாக கனடாவிற்குள் நுழைந்த சுமார் 380 பேரில் எட்டு பேர் மட்டுமே Quebec மாகாணத்தில் தங்கியிருந்ததாக அமைச்சர் கூறினார்.

ஏனையவர்கள் Ontario உட்பட கனடாவின் ஏனைய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கனடாவிற்கான அமெரிக்க தூதரை சந்தித்த Quebec  முதல்வர், பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் குறித்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார்.

Related posts

கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட OPP அதிகாரியின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

குழந்தை நல கொடுப்பனவில் மிகக் குறைந்த வருடாந்த அதிகரிப்பு!

Gaya Raja

கனடிய அரசுக்கும் – பொதுச் சேவை சங்கத்துக்கும் இடையில் தொடரும் பேச்சுவார்த்தை

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!