February 23, 2025
தேசியம்
செய்திகள்

உக்ரைன் தலைநகரில் உள்ள கனடிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து கனடா ஆராய்கிறது

உக்ரைன் தலைநகரில் உள்ள கனடிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து கனடா தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.

வெளிவிவகார அமைச்சர் Melanie Joly  ஒரு அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மேற்கு உக்ரைனில் இருந்து ரஷ்யா பின் வாங்கிய நிலையில், கனடா இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் கூறினார்.

எங்கள் தூதரகத்தை திறப்பது உக்ரைனுக்கான வலுவானதும் தொடர்ச்சியானதுமான ஆதரவை வெளிப்படுவதுவதுடன் கனேடியர்களுக்கான சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான வழிமுறையாகும் என Joly குறிப்பிட்டார்.

ஆனாலும் தூதரக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையானது என அமைச்சர் கூறினார்.

February நடுப்பகுதியில், Kyivவில் உள்ள தூதரக நடவடிக்கைகளை கனடா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts

Patrick Brown நிதி திரட்டும் நிகழ்வு குறித்த அறிவிப்பை வழங்காது தவறு

Lankathas Pathmanathan

N.L. முதல்வர் அரசியல் அழுத்தத்திற்கு அடி பணிந்துள்ளார்?

Lankathas Pathmanathan

Ontarioவில் 52 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment